Social Icons

Pages

Featured Posts

Friday 27 August 2021

Yellow Tiger Guppy Fish


Yellow Tiger Guppy Fish

Albino Full Red Fantail Guppy Fish

\
Albino Full Red Fan Tail Guppy Fish,Albino Red,Red Fan Tail Guppy Fish,Guppy Fish, Albino Red Guppy Fish.

Saturday 14 August 2021

Kid playing with Hen


Kid playing with Hen, Village kid playing with hen, children's playing with hen, kid video

Colour fish in fish Tank


Colour fish in fish Tank, Gold Fish, My Fish farm, Home decor, Fish decor

Friday 13 August 2021

Village kid Playing with Duckling


Village kid Playing with Duckling and Enjoying, Village  Kid, Duckling, Village Kid

Tuesday 5 January 2016

323 பந்துகளில் 1,009 ரன்கள்: 15 வயது மும்பை பள்ளி மாணவர் வரலாற்றுச் சாதனை!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 1000 ரன்களைக் கடந்து இமாலய சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ரன்களான 1009 ரன்களை 323 பந்துகளில் பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட்டில் விளாசி சாதனை படைத்துள்ளார் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே.

இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர் ஆவார். இவர் பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிரான போட்டியில் 323 பந்துகளில் 1009 ரன்களைக் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளார், மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 395 நிமிடங்கள் கிரீசில் இருந்த பிரணவ் 1009 ரன்களில் 129 பவுண்டரிகள்டையும், 59 சிக்சர்களையும் விளாசியுள்ளார். ஸ்கோர் 1465 ரன்களை எட்டியபோது காந்தி மேனிலைப்பள்ளி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்த ஸ்கோரும் ஒரு உலக சாதனை. 1926-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக விக்டோரியா 1,107 ரன்களை எடுத்ததே முந்தைய அதிக ஸ்கோருக்கான சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை பிரணவின் இமாலய இன்னிங்ஸினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போது எந்த வகையான கிரிக்கெட்டிலும் பிரணவ்வின் இந்த 1009 ரன்களே வரலாற்று சாதனையாகும். முன்னதாக பிரிட்டனில் ஏ.இ.ஜே.கொலின்ஸ் என்ற வீரர் தனிப்பட்ட முறையில் எடுத்த 628 ரன்களே மிகப்பெரிய சாதனையாக இதுவரை இருந்து வந்துள்ளது.

கடந்த மாலை 652 நாட் அவுட் என்று இருந்த பிரணவ், இன்று அனைத்து கால, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிப்பட்ட மிகப்பெரிய ஸ்கோரை அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் 2013-ம் ஆண்டு பிரிதிவி ஷா என்ற மும்பை ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் மாணவர் எடுத்திருந்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 546 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார் பிரணவ்.

பிரணவ்வின் இந்த இமாலய சாதனையில் நெகிழ்ச்சியடைந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் இவரது முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது.


பிரணவ் தனவாதேயின் சிறப்பு என்னவெனில் இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென், தோனியை தனது லட்சிய ஆளுமையாக இவர் குறிப்பிட்டுள்ளார். “நான் எப்பவுமே பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பமுள்ளவன். நான் சாதனை நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதாவது முதல் பந்திலிருந்தே அடித்து ஆடுவது என்பதே எனது இயல்பான ஆட்டம்” என்கிறார் இந்த இளம் சாதனை நாயகன்.

சச்சின் டெண்டுல்கர் இந்த வளரும் அதிரடி நாயகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday 13 December 2015

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை





நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .
நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .

திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .
பலன்கள் :
  • கல்வியில் மேன்மை
  • உடல்நலம்
  • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
  • செல்வம் பெருக
  • தொழில் வளர்ச்சி
வழிப்பாட்டு முறைகள் :
  • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
  • வில்வ இலையால் பூஜை
  • துளசி வழிபாடு
பார்க்கவேண்டியவை :
நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியம
வாயிலில் உள்ள நந்தி

சந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )
திருமதி வித்யாம்பாள் சன்னதி


ஆனந்த தாண்டவம் ஓவியம்

சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்
பிரகாரம்

சகித்து கொள்ளமுடியாத விஷயம் :

புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .